×

புயல் நிவாரணம் அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்க கோரி மக்கள் சாலை மறியல் போராட்டம்

மன்னார்குடி, பிப். 13; கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழ ங்க கோரி மன்னார்குடி அருகே கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடகாரவயல் ஊராட்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமிழக அரசு அறிவித்த தார்பாய் உள்ளிட்ட 27 வகையான நிவாரண பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு கள்  மற்றும் இழப்பீடு தொகைகளை பாகுபாடின்றி வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் மற்றும்  பெண்கள் மன்னார்குடியில் இருந்து கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலையில் புது ரோடு என்ற பகுதியில் நேற்று மாலை திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மன்னார்குடி இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் மண்டல துணை தாசில்தார் சந்திரசேகரன் நேரில் வந்து மக்களின் கோரிக்கைகள் குறித்து தாசில்தார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய தீர்வு விரைவில் காணப்படும் என உறுதியளித்ததன் பேரில் மக்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிக மாக கைவிட்டு கலைந்து சென்றனர்.
சாலை மறியல் போராட்டத்தால் மன்னார்குடி கும்பகோணம் இடையே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...