தொட்டியம், பிப்.13: தொட்டியம் அடுத்துள்ள சீலைப்பிள்ளையார்புதூரில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக இருவர் முசிறி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
தொட்டியம் அடுத்த சீலைப்பிள்ளையார்புதூரில் கடந்த 9ம் தேதி மீன் வியாபாரி மாணிக்கம் (எ) பிச்சாண்டி என்பவர் அவரது மாமனார் மாணிக்கம் என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் பிச்சாண்டி மாமனார் மாணிக்கம் தொட்டியம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்த நான்கு பேர் தப்பியோடி தலைமறைவானதாக கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று முசிறி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடுவர் நஷீர்அலி முன்னிலையில் சீலைப்பிள்ளையார்புதூரை சேர்ந்த பிச்சாண்டியின் மைத்துனர்கள் முரளி (25), கதிர்வேலன் (22) ஆகிய இருவரும் சரணடைந்தனர்.
குற்றவியல் நடுவர் இருவரையும் திருச்சி மத்திய சிறையில் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.