×

நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம், பிப். 13: விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  மூத்த வழக்கறிஞர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சந்திரசேகர், முன்னாள் அட்வகேட் அசோசியேஷன் சங்கத்தலைவர் ஆனந்தக்கண்ணன், ஜெயக்குமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும். சேமநலநிதியை அதிகரிக்க வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : lawyers ,court ,
× RELATED வழக்கறிஞர்கள் சாலை மறியல்