×

நடவடிக்கை தொடரும் என சப்-கலெக்டர் எச்சரிக்கை ஆண்டிபட்டியில் நடந்த இரு மாவட்ட போட்டிகளில் போடி கல்லூரி முதலிடம்

போடி, பிப்.13: ஆண்டிபட்டியில் நடந்த இரு மாவட்ட போட்டிகளில் போடி கல்லூரி மாணவர்கள் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தனர்.ஆண்டிபட்டி பாரத்நிகேதான் பொறியியல் கல்லூரியில் தேனி, மதுரை மாவட்ட அளவிலான 2019ம் ஆண்டு கலை நிகழ்ச்சிக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் போடி சி.பி.ஏ கல்லூரி மாணவ, மாணவியர்கள் நுண்கலை மன்றம் சார்பில் சென்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினர்.
குறிப்பாக பேச்சு போட்டியில் முதலாம் ஆண்டு வேதியியல் துறை மாணவன் கோபிந்தபாண்டியன் முதல் இடத்தையும், நெருப்பில்லா சமையல் போட்டியில் பாரம்பரிய உணவு வகைகளை வழங்கி 3ம் ஆண்டு வரலாற்று மாணவர்கள் கோபிநாத், வடமலைமுத்து முதலிடத்தையும், தனி நடனப்போட்டியில் முதுகலை மாணவர் இம்ரான்கான் முதலிடத்தையும், குழு நடனப்போட்டியில் சூரியபிரகாஷ், லாவண்யா, துர்கா, அபர்ணா, அபிதா, கவுசல்யா, தீபிகா ஆகியோர் முதலிடத்தை பிடித்து சுழற்கோப்பைகளையும் பெற்றனர்.மேற்படி மாணவ, மாணவியர்களை பாராட்டி பள்ளி தலைவர் சுப்பிரமணி, துணைத்தலைவர் கருப்பையா, செயலாளர் ராமநாதன் ஆகியோர் பரிசு சான்றிதழ் வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் மீனா, பேராசிரியர்கள் ராமலெட்சுமி, பழனிவேல்ராஜன், பால்பாண்டி, தேவர்பொம்மிநாயக்கர், காஞ்சனாதேவி, ஜெகதீசன், சேதுராமன், சுபத்திராதேவி, அன்புசெல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Bodi ,district tournaments ,Andipatti ,
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்