×

சாயர்புரம் கூட்டுறவு சங்க புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா

ஏரல், பிப்.13: சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ.20 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமை வகித்து புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் அறவாழி முன்னிலை வகித்தார். வங்கி செயலாளர் சகுந்தலா தேவி வரவேற்றார். நிகழ்ச்சியில் வங்கி துணை தலைவர் பண்டாரம், வைகுண்டம் ஒன்றிய அதிமுக செயலாளர் ஆறுமுகநயினார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், சாயர்புரம் நகர செயலாளர் துரைச்சாமி ராஜா, வங்கி உறுப்பினர்கள் பிரேம்குமார், பண்டாரம், ராஜசேகர், தங்கவேல், தேவதாஸ், வாசுகி, பெரியசெல்வம், ஜானகி உட்பட பலர் கலந்து கொண்டனர். வங்கி ஊழியர் கிருபாகரன் , பெருமாள் நன்றி கூறினர்.

Tags : Sai Babur Co-operative Society ,building building festival ,
× RELATED தேரியூர் கோயிலில் பூக்குழி திருவிழா