×

களக்காடு அருகே விவசாயியை வெட்டிய 2பேர் கைது

களக்காடு,பிப்.13:  களக்காடு அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர். களக்காடு அருகே உள்ள படலையார்குளத்தை சேர்ந்தவர் விவசாயி நம்பி (60). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த இசக்கி மகன் தாயப்பன் (35) என்பவருக்கும் ஆடு-மாடுகள் மேய்ப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் விவசாயி நம்பி ஊருக்கு அருகில் உள்ள செட்டிகுளம் பத்துக்காட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இசக்கி, அவரது மகன் தாயப்பன், முருகன் மகன் மற்றொரு இசக்கி (18), கோதைசேரியை சேர்ந்த மணி (35) ஆகிய நால்வரும் சேர்ந்து நம்பியை அரிவாளால் வெட்டினர். கொலை மிரட்டலும் விடுத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவரது மனைவி வெள்ளையம்மாள் களக்காடு போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ.லிபிபால்ராஜ் விசாரணை நடத்தி, இதுதொடர்பாக இசக்கி, மணி ஆகியோரை கைது செய்தார். தாயப்பனையும், அவரது தந்தை இசக்கியையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Kalakkadu ,
× RELATED திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம்