×

ஏர்வாடி கோயிலில் வருஷாபிஷேகம்

ஏர்வாடி,பிப்.13: ஏர்வாடியில் வணிகர் தெருவில் உள்ள சந்தனமாரியம்மன் கோயிலில் நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 5மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. அதன்பின் பால், சந்தனம், தயிர், போன்ற அபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு  அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு கோயிலின் முன் பகுதியில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டை அப்பகுதி இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags : Airwadi ,
× RELATED ஏர்வாடி அருகே காரில் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்