×

மொடக்குறிச்சியில் நிறைவடையும் நிலையில் தாலுகா அலுவலக கட்டிடம்

மொடக்குறிச்சி, பிப். 12:    ஈரோடு தாலுகாவை பிரித்து மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய இரண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டது. மொடக்குறிச்சி தாலுகா அலுவலகம் மொடக்குறிச்சியில் உள்ள சமுதாய கூடத்திலும், கொடுமுடி தாலுகா அலுவலகம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வாடகை கட்டிடத்திலும் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் மொடக்குறிச்சி சமுதாய கூடத்தில் செயல்பட்டு வரும் தாலுகா அலுவலகத்தால் திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமுதாய கூடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இதனை தொடரந்து தமிழக முதல்வர் மொடக்குறிச்சிக்கு புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.2 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதில் தாலுகா அலுவலகத்துடன் தாசில்தார் குடியிருப்பு, தாசில்தார் அறை, பொது அறை, ஆவணங்கள் வைக்கும் அறை 2, மண்டல தாசில்தார் அறை, வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவை உள்ளடங்கியது. இதனையடுத்து மொடக்குறிச்சியில் இருந்து எழுமாத்தூர் செல்லும் ரோட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.  இதில் இறுதி கட்ட பணியாக பெயிண்ட் மற்றும் மேற்கூரைகள் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Taluk ,office building ,Modakurichi ,
× RELATED குடவாசல் தாலுகாவில் 1691 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி