×

செயல் தலைவராக பொறுப்பேற்பு மோகன் குமாரமங்கலத்திற்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு

ஓமலூர், பிப்.12: ஓமலூர்  அருகேயுள்ள மாமாங்கம் பகுதியை சேர்ந்த மோகன் குமாரமங்கலம், காங்கிரஸ்  கட்சியின் தொழில் வல்லுநர் பிரிவு மாநில தலைவராக பணியாற்றி வந்தார். தற்போது தமிழக காங்கிரசின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்றுக்கொண்ட மோகன் குமாரமங்கலம், நேற்று மாலை ஓமலூர் வந்தார். அவருக்கு சேலம்  மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர்  ஓமலூரில் உள்ள காமராஜர், காந்தி, அம்பேத்கர் மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் மோகன் குமாரமங்கலம் கூறியதாவது:வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40  தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சியில்  கோஷ்டி மோதல் மற்றும்  பூசல் எதுவும் கிடையாது. ஒருசில கருத்து வேறுபாடுகள்  இருக்கலாம், அவையும் சரி செய்யப்படும். காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா முழுக்க பல்வேறு  மாநிலங்களுக்கு செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மோடி இந்திய மக்களை ஏமாற்றி வருகிறார். அதனால், அவரது பேச்சை  மக்கள் நம்ப மாட்டார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ படுதோல்வி அடைந்து காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் எத்தனை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

Tags : party ,Mohan Kumaramangalam ,Chief Executive Officer ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...