×

குடந்தையில் தமாகா சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

கும்பகோணம், பிப்.12: தஞ்சை மாவட்ட தமாகா இளைஞரணி சார்பில் கும்பகோணத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
உச்சிப்பிள்ளையார் கோயில் காந்தியடிகள் சிலை வளாகத்தில் கையெழுத்து இயக்கத்தை மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் தொடங்கி வைத்து பேசுகையில், எந்த தேர்தல் நடந்தாலும் வாக்காளர்கள் 100 சதவீத ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதிகளை சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் கொடுக்கும் இலவசங்களை வாங்கி கொண்டு ஓட்டு போடுவதால் 5 ஆண்டுகளுக்கு ஏமாற்றப்படுகிறோம் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும் என்றார்.  மாவட்ட தலைவர், ஜிர்ஜிஸ், நகர தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அசோக்குமார், இணை செயலாளர் சாதிக்அலி, மாவட்ட நிர்வாகிகள் அருண்குமார், ஸ்ரீராம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Tamana ,
× RELATED தமாகா ஊழியர் கூட்டம்