பொன்னமராவதி,பிப்.12: பொன்னமராவதி அருகே குண்டும், குழியுமாக ஜல்லி கள் பெயர்ந்து கங்காணிப்பட்டி சாலை கிடப்பதால் போக்குவரத்து பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சிசியில் இருந்து சொக்கநாத பட்டி, கங்காணிப்பட்டி வழியாக மரவாமதுரை செல்லும் தார் சாலை குண்டும் குழியு மாக போக்குவரத்துக்கு சென்று வரமுடியாத அளவிற்கு மோசமாக இருந்தது. இதனை சரிசெய்யக்கோரி பொதுமக்கள் வைத்த கோரிக்கையினை அடுத்து இந்த சாலை புதிதாக தார்சாலை அமைக்கும் பணி நடந்தது. நீண்ட நாட்களுக்கு பின் இந்த சாலையில் ஜல்லிகள் போடப்பட்டது. ஜல்லிகள் போட்டு நீண்ட நாட்கள் ஆகிய நிலையில் சொக்கநாதப்பட்டி வரை இந்த சாலை போடப்பட்டுள்ளது.
கங்காணிபட்டி-மரவாமதுரை வரை ஜல்லிகள் போடப்பட்டு அந்த ஜல்லிகள் பெயர்ந்தும், வாகனங்கள் செல்லும் போது தூசிகள் படர்ந்தும் போக்குவரத்துக்கு செல்ல முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது.
எனவே ஒப்பந்தகாரர்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கங்காணிப்பட்டி சாலையினை காலம் தாழ்த்தாமல் உடனடியாக தார் போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.