பொன்னமராவதி,பிப்.12: கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பால் பொன்னமரா வதியில் தர்பூசணி விற்பனை ஆரம்பம் ஆகிவிட்டது.
பங்குனி-சித்திரை (ஏப்ரல்-மே) மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகரிக் கும். அப்போது தான் தர்பூசணி போன்ற குளிர்ச்சியான பழங்கள் விற்பனை செய் வது வழக்கம். ஆனால் இப்போது தை மாதமே வெயிலின் தாக்கம் அதிகரித்து ள்ளது.
பொன்னமராவதி பகுதியில் இப்போது கடும் வெயில் வாட்டுகின்றது. இதனால் பொன்னமராவதியில் தர்பூசணி விற்பனை இப்போது தொடங்கி விட்டது.
பொன் னமராவதி பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டியில் தர்பூசணி விற்பனை செய்ய ப்பட்டது. இதனை பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர்.