வேதாரண்யம், பிப்.12: வேதாரண்யம் அருகே விஏஓவை பணி செய்ய விடாமல் தடுத்த தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் மருதூர் வடக்கு கிராம உதவியாளராக பணி செய்பவர் ராமராஜன் (29). இவர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்தவரும் ஆலத்தம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருமான வெற்றிச்செல்வன், ராமசந்திரன் உள்ளிட்ட 4 பேர் நிவாரண பொருள் வழங்கி கொண்டிருந்த கிராம உதவியாளர் ராமராஜனை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டி உள்ளனர். இதுகுறித்து கிராம உதவியாளர் ராமராஜன் கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.