நாகை, பிப்.12: நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தனித்துணை கலெக்டர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில மாற்று திறனாளிகளிடம் இருந்து வங்கி கடன், உதவித் தொகை கேட்டு 15 மனுக்களும், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பு, குடும்ப அட்டை, கஜா புயல் நிவாரணம் உதவித் தொகை கேட்டு 317 மனுக்கள் என 332 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் உதவி ஆணையர் வெங்கடேசன், மக்கள் தொடர் அலுவலர் செல்வகுமார் உள்ளிட்டேர் கலந்து கொண்டனர்.