×

புறவழிச்சாலை திட்டம் வருமா? சின்னஒவுலாபுரத்தில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

உத்தமபாளையம், பிப்.12: ராயப்பன்பட்டி அருகே சின்னஓவுலாபுரத்தில் மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராயப்பன்பட்டி காவல்நிலையத்திற்கு உட்பட்ட சின்னஓவுலாபுரம் மலையடிவாரம், மஞ்சள்நதி உள்ளிட்ட இடங்களில் மணல் கொள்ளை நடப்பதாக தகவல் கிடைத்தது. எஸ்ஐ ஜெய்கணேஷ் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சின்னஓவுலாபுரம் பிள்ளையார் கோயில் அருகே ஓடையில் மணலை அள்ளிக்கொண்டு வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சின்னஓவுலாபுரத்தை சேர்ந்த முருகன்(43) என்பவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு ராயப்பன்பட்டி காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

Tags : outskirts ,
× RELATED தகாத உறவுக்கு இடையூறு 4 வயது சிறுவன்...