×

கலைஞர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் விழா மேடை பணிகளை தெற்கு மாவட்ட செயலாளர் ஆய்வு

காஞ்சிபுரம், பிப்.12: கலைஞர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதையொட்டி, விழா மேடை அமைக்கும் பணிகளை தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் நேற்று ஆய்வு செய்தார்.காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில் அறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் திமுக தலைவர் கலைஞர்  கருணாநி ஆகியோரின் சிலை திறப்பு விழா வரும் 14ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெறுகிறது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிலைகளை திறக்கிறார். இதனைத்  தொடர்ந்து காஞ்சிபுரம் தேரடியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார். காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்கிறார். இதனை முன்னிட்டு காஞ்சிபுரம் தேரடியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள பகுதியில் விழா மேடை அமைக்கும் பணிகளை தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் திமுக  நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags : artist ,statue ceremonies ,occasion ,venue ,meeting ,Southern District ,
× RELATED 2023 ஆம் ஆண்டிற்கான “கலைஞர் எழுதுகோல் விருது” விண்ணப்பங்கள் வரவேற்பு