×

ஐடி நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை சிசிடிவி பதிவு மூலம் 3 வாலிபர்கள் கைது: 25 சவரன் மற்றும் பைக் பறிமுதல்

சென்னை, பிப். 12: திருவல்லிக்கேணி ஆச்சாரி முத்து தெருவை சேர்ந்தவர் திருவெங்கடம் (35). ஐடி நிறுவன ஊழியர். கடந்த 6ம் தேதி இவரது வீட்டு பீரோவில் வைத்திருந்த 28 சவரன் நகை, 1000 அமெரிக்க டாலர், 200 யூரோ, ₹3  ஆயிரம் மாயமானது. புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ெபற்று ஆய்வு செய்தபோது, சந்தேகப்படும்படி 3 வாலிபர்கள் பைக்கில் செல்வது தெரிந்தது.  அந்த பைக் பதிவு  எண்ணை வைத்து விசாரித்தபோது அயனாவரத்தை ேசர்ந்த கார்த்திக் (20), லோகேஷ் (20) மற்றும் அம்பத்தூரை சேர்ந்த சுபாஷ் (26) ஆகியோர், திருவெங்கடம் வீட்டில் கொள்ளையடித்தது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து 25 சவரன் நகை மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது.} அடையாறு மல்லிகை பூ நகரை சேர்ந்த கார் டிரைவர் வீரமணி (34) குடும்ப தகராறு காரணமாக வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார்.}  ஆதம்பாக்கத்தை சேர்ந்த மெக்கானிக் யுவராஜ் (24), நேற்று காலை தனது மாமா வெற்றி (2). நண்பர் முனியவேல் (34) ஆகியோருடன் மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் பைக்கில்  சென்றபோது விபத்தில் சிக்கினர். இதில், யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.} பழவந்தாங்கல் பி.வி.நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் போஸ்பால்ராஜ் (30). இவரது மனைவி அஸ்வினி நிஷா. இவர்களுக்கு  ஹரீஸ் என்ற 5 வயது மகன் உள்ளார். போஸ்பால்ராஜ் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், நேற்று அஸ்வினி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற நங்கநல்லூர், நேரு காலனியை சேர்ந்த மணிகண்டன் (26) ரயில் மோதி இறந்தார்.
* பாடி, சி.டி.எச்  சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலை தண்ணீர் சுத்திகரிப்பு  தொட்டியில் ஒரு வாலிபர் சடலம் மிதந்தது. கொரட்டூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.  
*  தரமணி அடுத்த களிக்குன்றம், திருவீதி  அம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணிவர்மன்  (17) என்ற பள்ளி மாணவன், பைக் ஓட்டிச் சென்றபோது, விபத்தில் சிக்கி இறந்தார்.  
*  அம்பத்தூர், பானு நகர், 28வது  அவென்யூவை சேர்ந்தவர் அரசு (48). இவரது மனைவி லட்சுமி (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்  உள்ளனர். இதற்கிடையில், அரசுக்கு அவரது வீட்டு எதிரில் வசிக்கும்  அன்னபூரணி (38)  என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. தற்போது, திருமுல்லைவாயல் திருமலைவாசன்  நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அன்னப்பூரணியுடன் வசித்து வந்த அரசு நேற்று முன்தினம் மர்மமான முறையில் இறந்தார்.  இதுகுறித்து முதல்  மனைவி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அன்னப்பூரணியிடம் விசாரிக்கின்றனர்.
* தண்டையார்பேட்டை பரமேஸ்வரி நகரை சேர்ந்த கார்த்திக் (21), பெசன்ட் நகரை சேர்ந்த 17 வயது சிறுமியை  காதலித்து, திருமணம் செய்து, விழுப்புரத்தில் குடும்பம் நடத்தி வந்தார். புகாரின் பேரில், சிறுமியை மீட்ட போலீசார்,  கார்த்திக்கை கைது செய்தனர்.
* தாம்பரம் விமானப் படை தளத்தில் பைலட் ஆக பணிபுரிந்து வரும் உமாங் நாட்டியால் (32) வீட்டில் 10 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில், அவர்களது வீட்டில் வேலை செய்த பல்லாவரத்தை சேர்ந்த சதீஷ் (29).  அவரது மனைவி சுகன்யா (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags : IT employee ,sovereign ,CCTV ,
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...