×

ராமச்சந்திராபுரத்தில் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்

வத்திராயிருப்பு, பிப்.8: ராமச்சந்திராபுரம் ஊராட்சியில் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிப்பதை கண்டித்து பொதுமக்கள் வத்திராயிருப்பு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வத்திராயிருப்பு அருகே உள்ளது ராமச்சந்திராபுரம் ஊராட்சி. இங்குள்ள 1வது வார்டில் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. எப்போது எந்த நேரம் தண்ணீர் வரும் என்பது தெரியாத நிலை உள்ளது. 4 ஆண்டுகளுக்குமேலாக இந்த அவலம் தொடர்ந்து வருகிறது. இது குறித்து மாவட்டக் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனுக்கொடுத்து நடவடிக்கை இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நாராயணன் என்பவர் தலைமையில் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் மனு அளித்தனர். பிரச்சனையை சரி செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் எச்சரித்துள்ளனர்.

Tags : Ramachandrapuram ,
× RELATED இளைஞர்களை வன்கொடுமை செய்த வழக்கில்...