×

மின்ஊழியரை பார்க்க செல்வது போல் நடித்து மூதாட்டியிடம் செயின் பறித்த புரோட்டா மாஸ்டர் கைது

திருச்சி, பிப். 8: திருச்சி எ.புதூர் பாப்பாகாலனியை சேர்ந்தவர் ரமேஷ்பிரபு. இவரது மனைவி பவானி. இருவரும் மின்வாரியத்தில் பணியில் உள்ளனர். ரமேஷ்பிரபுவின் தாய் காமாட்சி (60). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் வீட்டிற்கு வந்து ரமேஷ்பிரபுவை கேட்டுள்ளார். அதற்கு காமாட்சி இன்னும் வேலையில் இருந்து வரவில்லை என கூறியுள்ளார். இந்நிலையில் திடீரென வாலிபர் காமாட்சியின் கழுத்தில் கிடந்த நான்கரை பவுன் செயின் மற்றும் கையில் வைத்திருந்த செல்போன் ஆகியவற்றை
பறித்து சென்றார்.
வீடு திரும்பிய மகன் ரமேஷ்பிரபு வந்ததும் நடந்த சம்பவத்தை தாய் காமாட்சி கூறினார். இதுகுறித்து எ.புதூர் போலீசில் காமாட்சி புகார் அளித்தார். வழக்குபதிந்த எ.புதூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது எ.புதூரில் உள்ள டிபன் கடையில் புரோட்டா மாஸ்டராக பணியில் உள்ள கல்லுக்குழி கள்ளர்தெருவை சேர்ந்த முத்துபாண்டி (24) என்பவர் காமாட்சியிடம் செயின் பறித்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், புரோட்டா கடையில் அடிக்கடி பார்சல் வாங்கியபோது முத்துபாண்டியுடன் ரமேஷ்பிரபுவிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி அன்றைய தினம் வீட்டிற்கு சென்ற முத்துபாண்டி, காமாட்சியிடம் செயின், செல்போனை பறித்ததும் தெரிந்தது. இதையடுத்து வீட்டில் பதுங்கி இருந்த புரோட்டா மாஸ்டர் முத்துபாண்டியை நேற்று கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : master ,actress ,Protestant ,Chain ,
× RELATED கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை!