×

காங்கயத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

காங்கேயம்,பிப்.8: காங்கயத்தில் சாலைபாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்த  இருசக்கர வாகன  விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்ததுகாங்கயம் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் நடந்த இந்த பேரணியில்  போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், அனைத்து மகளிர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் ஹேமலதா, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி மற்றும் போலீசார்,பொதுமக்கள் கலந்து கொண்டனர் .இந்த பேரணி காங்கயம் பஸ்நிலையத்திலிருந்து புறப்பட்டு திருப்பூர் ரோடு , கடை வீதி ,கோவை ரோடு ,தாராபுரம் ரோடு கரூர் ரோடு வழியாக போலீஸ் நிலையத்தை அடைந்தது .இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் அனைவரும் தலைக்கவசம் அணிந்து சென்றனர் .

Tags :
× RELATED சட்ட பணிகள் குழுவுக்கு சட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்