×

மொரப்பூரில் அழகு கலை பயிற்சி மையம் தொடக்கம்

அரூர், பிப்.8: தர்மபுரி நபார்டு வங்கி, மொரப்பூர் விப்ரோ தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் சிறுதொழில் முனைவோர் அழகுகலை பயிற்சி மைய தொடக்க விழா நேற்று நடந்தது. நபார்டு திட்ட தர்மபுரி மாவட்ட வளர்ச்சி மேலாளர் பார்த்தசாரதி, குத்துவிளக்கேற்றி வைத்தார். விப்ரோ தொண்டு நிறுவன இயக்குநர் வெங்கடேசன் தலைமை வகித்தார். சிறுதொழில் முனைவோர் மேம்பாடு, தொழில் வாய்ப்புகள், சந்தை வாய்ப்புகள், பொருளாதார மேம்பாடுகள் குறித்து, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் அசோகன், பல்லவன் கிராம வங்கி ஒடசல்பட்டி கிளை மேலாளர் சரவணன் ஆகியோர் விளக்கினர். இதில், விப்ரோ தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அமுதா, சென்மேரிஸ் இயக்குநர் கனகராஜ், அழகு கலை பயிற்றுநர் தீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : beauty center ,arts training center ,Morappur ,
× RELATED தென்மண்டல வளரி போட்டி