×

பொன்னமராவதி மொந்தயன் பள்ளக்குளத்தில் மண்டிகிடக்கும் கருவேல மரங்கள் அப்புறப்படுத்த கோரிக்கை

பொன்னமராவதி,பிப்.8: பொன்னமராவதியில் உள்ள மொந்தயன் பள்ளக் குளத் தை மூடும் அளவிற்கு   மண்டிக்கிடக்கும் சீமைக்கருவேல் மரங்களை அப்புறப் படுத்தி குளத்தை மேம்பாடு  செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி  புதுப்பட்டியில் மலையாண் ஊரணி உள்ளது. இந்த ஊரனியின் கிழக்குப்பகுதியில்  மொந்தயன் பள்ளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தின் மேற்கு கரையில் கோயில்  உள்ளது.இந்த குளம் முழுவதும் சீமைக்கருவேல் மரங்கள் அதிக அளவு  மண்டிக் கிடக்கின்றது. இதனால் குளம் இருப்பதே தெரியவில்லை. அந்த அளவிற்கு  அதிக அளவு மரங் கள் குளம் முழுவதும் உள்ளது. எனவே இந்த மரங்களை  அப்புறப்படுத்தி இந்த குளத்தை மேம்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத் துள்ளனர்.

Tags : Poonamaravathi Monthyan ,hill ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை