×

சாயர்புரத்தில் ரூ.1.60 கோடியில் தார்சாலை பணி சண்முகநாதன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

ஏரல், பிப். 8: சாயர்புரத்தில் ரூ.1.60 கோடியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியை  சண்முகநாதன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.சாயர்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மால்தெரு- 1, 2, பிரஸ் தெரு, சர்ச் தெரு, போப் தெரு, கணோன் தெரு, சுந்தர்ராஜ்நகர், இருவப்பபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.60  கோடியில் தார் சாலை அமைக்கும் பணிகளின் துவக்க விழா நடந்தது. தலைமை வகித்த சண்முகநாதன் எம்.எல்.ஏ., பணிகளைத் துவக்கிவைத்தார். இதில் செயற்பொறியாளர் ஷெரிப், சாயர்புரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு, உதவி பொறியாளர் கண்ணன், பணி ஆய்வாளர் கோபி, சாலை ஒப்பந்தகாரர் ஜெபர்சன் சாமுவேல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Shanmuganathan MLA ,workshop ,terrace ,
× RELATED அவள்‘ திட்டத்தின் கீழ், வெலிங்டன்...