×

கரூர்- ராமானூர் சாலை வேகத்தடையில் ரிப்ளக்டர் இல்லாததால் வாகன ஓட்டிகள் திணறல்

கரூர், பிப். 8: கரூர்- ராமானூர் சாலையில் வேகத்தடையில் ரிப்ளக்டர் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர்- ராமானூர் செல்லும் சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தடை இருப்பதை சிறிது தூரத்திற்கு முன்னரே வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில் ரிப்ளக்டர் அல்லது வெள்ளைக்கோடு இருப்பது வழக்கம். ஆனால் இந்த சாலையில் இரண்டும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் அருகே வந்ததும் சுதாரித்துக்கொண்டு பிரேக் போட்டு தடுமாறி செல்கின்றனர். நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல சாலைகளில் ரிப்ளக்டரோ வெள்ளைக்கோடோ இருப்பதில்லை. விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள இதற்கு தீர்வு காணும் வகையில் ஒளிஉமிழும் கோடுகளையும், ரிப்ளக்டர்களையும் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Carri-Ramanur ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு