×

கரூர் ராயனூர்- கோடங்கிபட்டி சாலையில் குப்பைகளை எரித்ததால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், பிப். 8: கரூர் ராயனூர்- கோடங்கிபட்டி சாலையில் குப்பைகளை எரித்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.கரூர் ராயனூரில் இருந்து கோடங்கிபட்டி செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதில்லை. பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக உள்ளது. மேலும் காலியிடங்களில் குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். அகற்றப்படாத குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்கப்படுகிறது. நேற்று கோடங்கிபட்டி செல்லும் சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் தடுமாற்றம் அடைந்தனர்.
எனவே குப்பைகளை எரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur Raayanur ,road ,Kodungipatti ,motorists ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி