சீர்காழி, பிப்.8: சீர்காழி தென்பாதியில் மக்களுக்கு இடையூறாக சாலையோரம் இருந்த கருவேல மரங்களை சாலை பணியாளர்கள் அகற்றினர்.சீர்காழி தென்பாதி பகுதியில் சாலையோரங்களில் கருவேல மரங்கள் வளர்ந்து சாலைகளில் படர்ந்து காணப்பட்டது. இதனை அகற்ற வேண்டுமென வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து சீர்காழி நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சூர்யமூர்த்தி ஆலோசனையின் பேரில் சாலை பணியாளர்கள் தென்பாதி பகுதிகளில் சாலையோரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலையோரங்களில் காணப்படும் கருவேலமரங்களை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.