×

சாலை பாதுகாப்பு கருத்தரங்கம்

ஊத்துக்கோட்டை, பிப்.8: ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து போலீசார் சார்பில் பள்ளி மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டையில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து துறை மற்றும் ஊத்துக்கோட்டை காவல் துறை, தனியார் பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதற்கு ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் தலைமை தாங்கினார். இதில், ஒரு பகுதியாக நடந்த பேரணியில், சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்கள் ஏந்திச்சென்றனர்.இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கர்,  இன்ஸ்பெக்டர்கள் காவேரி, ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...