×

செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் 14ம் ஆண்டு விளையாட்டு விழா: காமன்வெல்த் நடுவர் பங்கேற்பு

செங்கல்பட்டு, பிப்.8: செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கலைக் கல்லூரியில் 14ம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  வித்யாசாகர் கல்வி குழும தாளாளர் விகாஸ் சுரானா தலைமை வகித்தார். இயக்குனர் ஆச்சாரியா, பொருளாளர் சுரேஷ் கன்காரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஷாலினி குமார் வரவேற்றார். தொடர்ந்து, கல்லூரி உடற்பயிற்சி அலுவலர் உஷா மேரி, விளையாட்டு விழா ஆண்டறிக்கை வாசித்தார்.  சிறப்பு அழைப்பாளராக தேசிய தடகள விளையாட்டு வீரரும், காமன்வெல்த் போட்டி நடுவருமான டாக்டர் டி.சந்திரபோஸ் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம் உள்பட பல போட்டிகள் நடைபெற்றது.  பின்னர் மாணவிகள் யோகா, ஏரோபிக்ஸ், போன்ற உடற்பயிற்சிகளும் கராத்தே போன்ற தற்காப்பு கலைகளும் செய்து காட்டினர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 250 மாணவிகளுக்கு வெற்றி கோப்பை, பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் விளையாட்டுத் துறையில் சாதனை செய்த 10 மாணவிகளுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கப்பட்டது. தனி நபர் வெற்றி கேடயத்தை 2ம் ஆண்டு வணிக நிர்வாகவியல் மாணவி சுசித்ரா பெற்றார். ஒட்டுமொத்த வெற்றி கேடயத்தை வணிகவியல் துறை மாணவிகள் பெற்றனர். இறுதியில் விளையாட்டுத் துறை இணைச் செயலாளர் மாணவி சுசித்ரா நன்றி கூறினார்.

Tags : ceremony ,Vidyasagar Women's College ,Chengalpattu: Commonwealth Arbitration ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா