×

மலைச்சாரல் கவியரங்கம்

ஊட்டி, பிப். 7: நீலகிரி மாவட்ட தமிழ் கவிஞர்கள் சங்கத்தின் சார்பில் மாதந்தோறும் கவியரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 449வது மலைச்சாரல் கவியரங்கம் ஊட்டியில் நடந்தது. தமிழ் கவிஞர் சங்க தலைவர் பெள்ளி தலைமை வகித்தார்.
புலவர் சோலூர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் புதிய கவிதை புத்தகங்கள் ெவளியிடுவது, இளம் கவிஞர்களை சேர்ப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கவிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் கவி பாடினார்கள்.
இதில் மணி அர்ஜூணன், ஜமீலா பேகம், நாகராஜ், ஜனார்த்தனன், மாரியப்பன், சுந்தரபாண்டியன் உட்பட ஏராளமான கவிஞர்கள் பங்கேற்றனர். முடிவில் கவிமன்ற செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

Tags :
× RELATED பெரியநாயக்கன்பாளையம் அருகே...