×

ஊட்டி - மஞ்சூர் சாலையில் சுற்றுலா பயணிகளை கவரும் எவர் லாஸ்ட் மலர்கள்

ஊட்டி, பிப். 7:  ஊட்டி - மஞ்சூர் சாலையோரங்களில் மஞ்சள் நிறத்தில் பூத்துள்ள எவர் லாஸ்ட் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளை கொண்டது. இந்த மலைகளில் பல்வேறு வகையான தாவரங்கள், மரங்கள், மூலிகை செடிகள் மற்றும் மலர் செடிகள் காணப்படுகிறது. இதில், சில வகை மலர் செடிகள் குறிப்பிட்ட சீசன்களில் கொத்து கொத்தாக பூத்து உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் வசீகரிப்பது வழக்கம். இதில் ஆண்வு தோறும் பூக்கும் எவர்லாஸ்ட் மலர்கள், டேலியா, காட்டு சூரியகாந்தி மற்றும் கோத்தகிரி மிலார் செடிகளில் பூக்கும் மலர்கள் முக்கியமானது.
 காட்டு டேலியா மற்றும் சூரியகாந்தி மலர்கள் கடந்த நவம்பர் மாதங்களில் சாலையோரங்களில் பூத்துக் குலுங்கின. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து சென்றனர். தற்போது, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோத்தகிரி மிலார் செடிகளில் மஞ்சள் நிறத்தில் மலர்கள் பூத்துள்ளன.
அதேபோல், சாலையோரங்களில் பல இடங்களிலும் எவர்லாஸ்ட் மலர்கள் பூத்துள்ளன. குறிப்பாக, ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையோரங்களில் காந்திப்பேட்டை. 6வ மைல், காத்தாடி மட்டம், ஓண்டிவீடு போன்ற பகுதிகளில் தற்போது சாலையோரங்களில் எவர்லாஸ்ட் மலர்கள் அதிகளவு பூத்துள்ளன.
இவ்வழியாக வரும் கேரள மாநில சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை கண்டு ரசிப்பதுடன், அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் இந்த மலர்களை கண்டு ரசித்து செல்வதுடன், புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

Tags : Ooty ,road ,Manjur ,
× RELATED ஊட்டி-கூடலூர் சாலையில் கார் தீப்பற்றி எரிந்தது; 5 பேர் உயிர் தப்பினர்