கோவை, பிப்.7: கோவை போத்தனூர் கஞ்சிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் சிவானந்தன்(52). தனியார் நிறுவன ஊழியர்.
நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் இருந்த போது, 2 வாலிபர்கள் உள்ளே புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை திருட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்து சிவானந்தன் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் திருடர்களை கையும், களவுமாக பிடித்தனர்.
இதுகுறித்து போத்தனுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வந்த போலீசார் அவர்கள் 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர்கள் சிங்காநல்லுாரை சேர்ந்த அக்னிஸ்வரன் (21) மற்றும் சிவக்குமார் (20) என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.