×

பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டுவிழா

சிவகாசி, பிப்.7: சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் 38வது ஆண்டு விழா மற்றும் நிறுவனர்தின விழா நடைபெற்றது. தாளாளர் அசோகன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன்  வரவேற்று பேசினார். தமிழ்நாடு உணவுப்பொருள் வர்த்தக சங்க தலைவர் ஜெயப்பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ‘‘மாணவர்கள் விடா முயற்சியோடு புதிய சிந்தனையோடு படைப்புகளை படைக்க வேண்டும். மாணவர்கள் சிறு தொழில் துவங்கி பலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் தொழில் முனைவோராகவும் உருவாக வேண்டும்’’ என்றார். பின்னர் கல்லூரியில் நடைபெற்ற வாரிய தேர்வு மற்றும் பல்வேறு தனித்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியை அச்சுதுறை பேராசிரியர் மாரிமுத்து, ஆங்கிலத் துறை பேராசிரியர் பெமில் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

Tags : Polytechnic College Anniversary ,
× RELATED பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா