×

பழுதடைந்த கட்டிடமாக காட்சியளிக்கும் ஆலம்பட்டி வாக்குச்சாவடியை மாற்ற ஆர்டிஓ உத்தரவு

திருமங்கலம், பிப். 7:பழுதடைந்த கட்டிடமாக காட்சியளிக்கும் ஆலம்பட்டி அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியை மாற்றும்படி ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார். உசிலம்பட்டி ஆர்டிஓ முருகேசன் திருமங்கலம் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள், வாக்குசாவடி மையங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தாசில்தார் நாகரத்தினம், பிடிஓ உதயகுமார், தர்மராஜ், நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர். திருமங்கலம் நகரில் தெரு விளக்குகள், வாறுகால் வசதிகள், குடிநீர் வசதிகள் சரிவர இருக்கிறதா என ஆய்வு செய்தார். எரியாமல் இருந்த தெரு விளக்குகள் குறித்து நகராட்சி, பஞ்சாயத்துகளுக்கு தகவல் கூறி உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். ஆலம்பட்டி கிராமத்திலுள்ள அரசு பள்ளியிலுள்ள வாக்குசாவடி மையத்தை ஆய்வு செய்த போது அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மையம் பழுதடைந்திருந்தது தெரியவந்தது. இதனை உடனடியாக எதிரேயுள்ள பள்ளி வளாகத்திற்கு மாற்றும்படி ஆர்டிஓ உத்தரவிட்டார்.

Tags : RDO ,Alampatti ,building ,
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...