வேடசந்தூர், பிப். 7: வடமதுரை ஒன்றியம் வேல்வார்கோட்டை, காணப்பாடி, சிங்காரக்கோட்டை, வேலாயுதம்பாளையம் ஊராட்சிகளில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் காந்திராஜன் தலைமை வகிக்க, நகர செயலாளர்கள் கணேசன், கருப்பணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். இதில் ஊராட்சி செயலாளர் பாலாமணி பிச்சை, ஒன்றிய துணை செயலாளர்கள் கர்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.