×

கந்தர்வகோட்டையில் விடுப்பட்ட பயனாளிகளுக்கு நிவாரண பொருள் வழங்கல்

கந்தர்வகோட்டை, பிப்.7: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் புதுபட்டி, சிவந்தான்பட்டி மற்றும் வேம்பன்பட்டியில் கஜாபுயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கிய 27 பொருட்கள் அடங்கிய இலவச பெட்டிகள் வழங்கப்படாமல் இருந்தது.இதனால் அப்பகுதி மக்கள் சாலைமறியல் மற்றும் முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை தேர்வு செய்து நேற்று தாலுகா அலுவலகத்தில் 27 பொருட்கள் அடங்கிய நிவாரண இலவச பொருட்கள் வழங்கப்பட்டன. முதற்கட்டமாக புதுப்பட்டி, மல்லிகைநத்தம் மற்றும் சமுத்துவபுரத்திற்கு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் விடுப்பட்ட பயனாளிகளுக்கு இன்று வழங்கப்படவுள்ளது.இலவச திட்டங்களை பயனாளிகளுக்கு கொடுக்கும் சமயத்தில் ஏதாவது பிரச்னை வராமல் இருக்க கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளிடம் பாதுகாப்பு கோரிக்கை விடப்பட்டும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED அரிமளம் அருகே நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்