×

திசையன்விளையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

திசையன்விளை, பிப். 7: உத்தரபிரதேசத்தில் மகாத்மா காந்தி நினைவு நாளில் அவரது உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டு அவமரியாதை செய்த இந்துமகா சபா தலைவி பூஜா பாண்டேவை கண்டித்து திசையன்விளை காமராஜர் சிலை முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் ராஜன் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி செயலாளர் விவேக்முருகன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் குமார், மாவட்ட துணை தலைவர் விஜயபெருமாள், ஓபிசி அணி தலைவர் ஜான்கென்னடி, முன்னாள் வட்டார தலைவர் ஞானராஜ் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் பொன்ராஜ், சிவாஜி முத்துக்குமார், ஜெயசிங், மனோகர், முத்து, நகர செயலாளர் சங்கர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஐசக், விஜயராஜன், வீரபாகு, செல்வின், பண்டாரம், சரவணன், குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார கலைப்பிரிவு தலைவர் மணிமாறன் நன்றி கூறினார்.

Tags : Congress ,demonstration ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...