வீரவநல்லூர்: வீரவநல்லூர் கிளாக்குளம் சீனிவாச பெருமாள் கோயில் சன்னதி தெருவை சேர்ந்தவர் மோகன் மகன் தென்கரை மகாராஜன் (23). இவர் பிளஸ்2 வரை படித்துவிட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த மகாராஜன், கோவைக்கு திரும்பாமல் ஊரிலேயே இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகாராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வீரவநல்லூர் போலீசார், மகாராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக அவரது தாய் விஜயா கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஐ ராமகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.