×

சீர்காழி நகராட்சியில் பேட்டரியில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனம் துவக்கம்

சீர்காழி, பிப்.7: சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.14.80 லட்சம் செலவில் குப்பைகள் சேகரிக்கும் பேட்டரியில் இயங்கும் 2 வாகனங்களும், 2 சரக்கு வாகனங்களும் புதிதாக வாங்கப்பட்டு அதனை பயன்பாட்டிற்கு அளிக்கும் விழா நடைபெற்றது. நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் தலைமை வகித்தார்.  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் ராஜமாணிக்கம், போகர்.ரவி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் பக்கிரிசாமி, துணை தலைவர் மணி, துப்புரவு அலுவலர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி மேலாளர் ஆனந்தராஜ் வரவேற்றார். எம்.எல்.ஏ பாரதி புதிய வாகனங்களின் சாவிகளை ஓட்டுனர்களிடம் வழங்கி பேசினார். இதில், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : garbage collector ,municipality ,Sirkali ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு