×

உடன்குடி அருகே அண்ணியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

உடன்குடி,  பிப். 7: உடன்குடி அருகே அண்ணியை தாக்கியவர்  மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். அம்மன்புரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது வீடும், தம்பி செல்வகுமார் வீடும் அருகருகே உள்ளன. தங்கபாண்டி  மனைவி செல்வராணிக்கும் தம்பி மனைவி தங்கமணிக்குமிடையே கடந்த சில நாட்களாக  தகராறு இருந்துவந்தது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில் அங்கு வந்த செல்வகுமார் செல்வராணியை  தாக்கினார். புகாரின்பேரில் மெஞ்ஞானபுரம் எஸ்ஐ அமலோற்பவம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags : sister-in-law ,Udangudi ,
× RELATED உடன்குடியில் பைக் திருடிய வாலிபர் கைது