×

கோவில்பட்டியில் செந்தில் ஜூவல்லர்ஸ் ஆண்டு விழா

கோவில்பட்டி, பிப். 7: கோவில்பட்டியில் செந்தில் ஜூவல்லர்ஸ் 40வது ஆண்டு துவக்க விழா நடந்தது. கோவில்பட்டி மெயின்ரோட்டில் அமைந்துள்ள செந்தில்ஜூவல்லர்ஸ் நகைகடையில் 40வது ஆண்டு துவக்க விழா நடந்தது. நகை கடை உரிமையாளர் பாலசுப்பிரமணியன்,  சக்தி பாலசுப்பிரமணியன்  குத்துவிளக்கேற்றினர். நகைக்கடை உரிமையாளர்  சரவணன், விழாவையும், முதல் விற்பனையையும் துவக்கிவைத்தார். விழாவையொட்டி வரும் 20ம் தேதி வரை 916 கேடிஎம் தங்க நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை  என்றும், கிராம் கூலி ரூ.150 முதல் ரூ.350 வரை மட்டுமே என்றும், வெள்ளி  கொலுசுகள், வெள்ளி பாத்திரங்களுக்கு செய்கூலி சேதாரம் இல்லை என்றும் கடை  உரிமையாளர் சரவணன் தெரிவித்தார். துவக்க விழாவில் வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள்  என திரளானோர் பங்கேற்னர்.

Tags : Senthil Jewellers Anniversary ,Kovilpatti ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம்...