கோவில்பட்டி, பிப். 7: கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி ஹெல்மேட் விழிப்புணர்வு பைக் பேரணி நடந்தது. இதில் பெண் காவலர்கள் உள்ளிட்ட திரளானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி ஹெல்மேட் விழிப்புணர்வு பைக் பேரணி நடந்தது. காவல் துறை சார்பில் நடந்த இப்பேரணியை டி.எஸ்.பி. ஜெபராஜ் கொடியசைத்துத் துவக்கிவைத்தார். இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், ஜூடி, முத்துலட்சுமி, டிராபிக் எஸ்ஐ சுடலைமுத்து பங்கேற்றனர். டி.எஸ்.பி. அலுவலகம் அருகில் இருந்து துவங்கிய இப்பேரணி எட்டயபுரம் ரோடு, கதிரேசன்கோவில் ரோடு, பார்க்ரோடு, மெயின்ரோடு, மார்க்கெட் ரோடு, புதுரோடு வழியாக டி.எஸ்.பி. அலுவலகத்தில் மீண்டும் நிறைவடைந்தது. இதில் ஆண், பெண் காவலர்கள் மற்றும் டிராபிக் போலீசார் என திரளானோர் ஹெல்மேட் அணிந்து இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றனர். மேலும் பேரணியின்போது சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மேட் அணியக்கோரி போலீசார் வலியுறுத்தினர்.