×

ஓய்வூதியம் வழங்காமல் இழுத்தடிப்பு ஓய்வு ஊழியர் தர்ணாவால் பரபரப்பு

காவேரிப்பட்டணம், பிப்.6:  கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே வேலன் நகரில் வசிப்பவர் மனோகரன் (64). இவர், கதர் கிராம வாரிய சோப்பு அலகு பிரிவில் 35 ஆண்டுகளாக பணியாற்றினார். ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவருக்கு இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.  முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும், கைத்தறி மற்றும் கதர் துறை செயலாளருக்கும், மாவட்ட கலெக்டருக்கும், சோப்பு வல்லுநர் அலுவலகத்திற்கும் புகார் மனு அனுப்பியும், நேரில் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் விரக்திக்குள்ளான மனோகரன் நேற்று காலை 11 மணிக்கு, காவேரிப்பட்டணத்தில் உள்ள கதர் வாரிய சோப்பு உற்பத்தி அலகு மேலாளர் அலுவலகம் வந்தார். அங்கு மனு அளித்த அவர் அலுவலகம் முன்பாக பானையில் நாமம் போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த மேலாளர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மனோகரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Pranab Mukherjee ,
× RELATED இப்போது இருந்தால்...