×

ஆலங்காட்டில் தனியார் செல்போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு ஒன்றிய ஆணையரிடம் மனு

முத்துப்பேட்டை,பிப்.6: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் உள்ள செட்டித்தெருவில் எராளமான குடியிருப்புகள் உள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவரது இடத்தில் தனியார்  செல் டவர் அமைக்க பணிகள் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நிறுவனத்திடம் இப்பகுதியில் டவர் அமைக்க கூடாது என்று கூறி வந்தனர். ஆனாலும் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி அப்பகுதியில் டவர் ;அமைத்தனர். இன்னும் மின் சப்ளை உட்பட பணி முழுமையடையும் நிலையில் உள்ளது, நேற்று தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில இளைஞர் அணி செயலாளர் தீரன், மாவட்ட நிர்வாகி ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் மக்கள் முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய ஆணையரை சந்தித்து மனு ஒன்று கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:
இந்த பகுதியில் செல்போன் டவர் அமைப்பது மூலம் அதில் ஏற்படும் கதிர் வீச்சினால் கேன்சர் (புற்றுநோய்) உட்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்புகள் உள்ளது. இதனால் இப்பகுதி மக்களாகிய நாங்கள் பெறும் அச்சத்தில் வசித்து வருகிறோம் எனவே இங்கு செல்போன் டவர் அமைக்க  அனுமதி அளிக்க கூடாது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட ஒன்றிய ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததுடன் உடன் ஆலங்காடு ஊராட்சி நிர்வாகத்திற்கு ஊராட்சியில் அனுமதியில்லாமல் டவர் அமைப்பது ஊராட்சி சட்டப்படி குற்றமாகும் உடன் டவர் அமைக்கும் நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுக்கவும் என்று கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Anti-Terrorism Commission ,
× RELATED திருவாரூர் மாவட்ட கடற்கரை பகுதியில் ஜூன் மாதம் 25 கிமீ தூரம் தூய்மை பணி