×

முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் 30வது சாலை பாதுகாப்பு வாரவிழா

முத்துப்பேட்டை, பிப்.6: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 30-வது சாலை பாதுக்காப்பு வாரவிழா எஸ்ஐ முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் டிஎஸ்பி இனிகோ திவ்யன் மாணவர்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்து பேசினார்அதனைதொடர்ந்து போலீசார் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுக்காப்பு விழிப்புணர்வு பேரணி பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்டு சங்கேந்தி கடைதெருவிற்கு வந்தது. அங்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் போலீசார் சாலை பாதுகாப்பு குறித்தும் விதிமுறைகள் குறித்தும் துண்டுபிரசுரங்கள் வழங்கி பேசினர்.
மேலும் அப்பகுதியில் சென்ற வாகனங்களுக்கு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. இதில் சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர்தமிழ்செல்வன், மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு