×

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 9ம் தேதி நடக்கிறது

தஞ்சை, பிப். 6: தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 9ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 9ம் தேதி மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் காலை 9 முதல் பிற்பகல் 4 மணி வரை நடக்கிறது. வேலைவாய்ப்பு முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று வேலை நாடுவோருக்கு 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பை அளிக்கவுள்ளனர்.
முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இலவச பயிற்சி வகுப்புக்காக பதிவுகளையும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் ஆர்ஆர்பி, டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், எஸ்பிஐ போன்ற போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கான பதிவுகளையும் மேற்கொள்ள உள்ளது.
முகாமில் 18 முதல் 45 வயது வரையிலான பணிநாடுவோர் பங்கேற்கலாம். விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் பயன்பெறலாம்.
மேலும் முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள ஏதுவாக தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை, எதிர்பார்க்கும் கல்வித்தகுதி மற்றும் அளிக்க இருக்கும் ஊதியம் போன்ற விவரத்தை dddeotnj@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 04362 237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Tags : Thanjay Sarapozhi ,camps ,
× RELATED 88 முகாம்களில் நடக்கிறது 10ம் வகுப்பு...