இலுப்பூர், பிப்.6:புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூந்து நிலையம் அருகே டாக்சி ஸ்டாண்டு உள்ளது. இந்த ஸ்டாண்ட் அருகே பல ஆண்டு முன்பு அமைக் கப்பட்ட இரும்பு மின் கம்பம் உள்ளது. பல ஆண்டுகள் ஆனதால் இதன் அடிப் பகுதி துருபிடித்து ஒடிந்திருந்தது.
சிமெண்ட பூச்சினால் சற்றே தாங்கி இருந்தது. கஜா புயலின் போது இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து விட்டது. அருகில் உள்ள மின்கம்பங்களின் இழுத்து கட்டப்பட்டுள்ள மின் கம்பிகளால் இந்த மின் கம்பம் நிற்கிறது. காற்றடிக்கும் போது இந்த மின்கம்பம் அசைவதால் வாகனத்தில் செல்லுபவர்களும் அருகில் இருக்கும் வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனர்.
அடிக்கடி வாகனங்கள் செல்லும் இலுப்பூர் விராலிமலை சாலையில் இந்த மின் கம்பம் உள்ளதால் அசம்பாவிதம் நடக்கும் முன் இந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.