×

பொன்னமராவதியில் குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா? மக்கள் எதிர்பார்ப்பு

பொன்னமராவதி, பிப்.6: பொன்னமராவதி பேரூராட்சி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி முன்பு உள்ள குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரி
க்கை விடுத்துள்ளனர்.
பொன்னமராவதி பேரூராட்சியில் அம்மன் கோயில் வீதியில் வலம்பு வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர்கள் மற்றும் இப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பள்ளி முன் சிறுமின்விசை குடிநீர் அமைக்கப்பட்டு இதன் மூலம் தண்ணீர்
வழங்கப்பட்டு வந்தது.
இந்த சிறுமின்விசை குடிநீர் தொட்டி நீண்ட நாட்களாக பழுதாகி கிடந்தது. இதன் பின்னர் பழுதுகள் சரிசெய்யப்பட்டு தொட்டிகள் புதிதாக அமைக்கப்பட்டது. இதன் பின்னரும் இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தண்ணீருக்கு நீண்ட தூரம் செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே, இங்குள்ள குடிநீர் தொட்டியினை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Tags : Ponnaravarai People ,
× RELATED பொன்னமராவதியில் அரசுகல்லூரி அமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு