×

திருக்கடையூரில் அபிராமி அம்மனுக்கு 1008 பால்குட அபிஷேகம்

தரங்கம்பாடி. பிப்.6: திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் தை அமாவாசையை யொட்டி திருக்கடையூர் யானை குளக்கரையிலிருந்து 10வது ஆண்டாக ஆயிரக்கணக்கான பெண்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க பால்குடம் எடுத்து வந்தனர். அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அபிராமி அம்மனுக்கு 1008 குடம் பால் கொண்டு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து
கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags : Abirami Ammu ,Tirukudur ,Balakuda Abhishekam ,
× RELATED திருக்கடையூரில் 100 ஆண்டு பழமையான அரசு...