×

வீட்டை உடைத்து 15 பவுன் திருட்டு

ஒட்டன்சத்திரம், பிப். 3: ஒட்டன்சத்திரம் அருகே பெரியகோட்டையை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (60). இவரது மனைவி பத்மாவதி. இருவரும் வீட்டை பூட்டி கோவைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் தங்க நகை, ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சியை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரில் அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Theft ,house ,Bourne ,
× RELATED கனமழை எதிரொலி படகு இல்ல சாலையில் மழைநீரில் சிக்கிய கார்