×

மாதா ஆலயத்தில் பொங்கல் விழா

தொண்டி,பிப்.3:  தொண்டி அருகே காரங்காடு புனித செங்கோல் மாதா ஆலயத்தில் பொங்கல் பெருவிழா நடைபெற்றது. காரங்காடு கிராமத்தில் உள்ள செங்கோல் மாதா திருஉருவம் கடலில் மிதந்து வந்ததாகும். முற்றிலும் மீனவர்கள் வசிக்கும் இக்கிராமத்தில் மீன்பிடி தொழில் நல்ல முறையில் நடைபெற நேற்று இந்த ஆலயத்தின் முன்பு பொங்கல் பெருவிழா நடைபெற்றது. ஆர்.எஸ்.மங்கலம் வட்டார அதிபர் பங்கு தந்தை கிளமெண்ட் ராஜா தலைமை வகித்தார். விவசாயம் மீன்பிடி உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறப்புறவும், மக்கள் நன்மை பெறவும் பங்கு தந்தை சாமிநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.  பொங்கல் உணவு கடல் மாதாவுக்கு நன்றி செலுத்தும் விதமாக கடலில் கரைத்தனர். திருத்தொண்டர் பினோட்டன், அமலவை அருட்சகோதரிகள், கிராம நிர்வாகிகள், பங்கு இறைமக்கள் மற்றும் சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Pongal Festival ,Mada Temple ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா